பாரதி காண விரும்பிய பாரத சமுதாயம் குறித்துக் கட்டுரை வரைக.
முன்னுரை
கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர், சமூக சீர்திருத்தவாதி என்ற பன்முக ஆளுமை கொண்டவர் மகாகவி பாரதியார். தாய்நாட்டின் மீதும் தாய்மொழி மீதும் அளவற்ற பற்று கொண்டவர். பாரத நாட்டின் மீதான அவரது கனவு அளப்பரியதாக இருந்தது. தேசிய விடுதலையோடு நாட்டின் பல்வேறு சிக்கல்களும் தீரும்படியான ஒப்பற்ற கனவு பாரதம் பாரதியாருக்கு இருந்தது. தனது கனவை 'பாரத சமுதாயம்' என்ற கவிதையில் அழகுற வெளிப்படுத்துகிறார் அவர்.
பொதுவுடைமைச் சமுதாயம்
![]() |
| பாரதியார் |
தான் காண விரும்பிய பாரத சமுதாயம் இந்த உலகத்துக்கு ஒரு முன்மாதிரியாக, புதுமையாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார் பாரதியார். அந்தச் சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயம் என்பதே அவரது கனவு.
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை"
பாரத நாட்டில் எல்லோரும் சமம்; எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; ஒப்பில்லாத சமுதாயமாக பாரத சமுதாயம் திகழ வேண்டும் என்பது பாரதியாரின் விருப்பமாக இருந்தது.
புதிய பாரதம்
'இனி இந்த பாரத நாட்டில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லை. ஒருவரையொருவர் ஏமாற்றிப் பிழைக்கும் வழக்கமும் இனி இல்லை புதிய பாரதம் புதிய சமுதாயமாக மாற வேண்டும்' என்னும் சமதர்மக் கொள்கையைத் தன் பாடல் வரிகள்வழி பாரதியார் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ? - நம்மில் அந்த
வாழ்க்கை இனி உண்டோ?"
என்று புதிய பாரதம் குறித்த கனவை மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்துகிறார்.
வளமான பாரதம்
நம் பாரத நாடு வளமான நாடு. அழகிய சோலைகளும் நெடிய வயல்களும் நிறைந்த நாடு நம் பாரதநாடு. வளமான கனிகளும் கிழங்கு வகைகளும் தானியங்களும் கணக்கின்றி விளையும் நாடு நம் பாரத நாடு. இந்த வளமும் செழிப்பும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பது அவரது பாரத சமுதாயம் குறித்த கனவுகளில் ஒன்றாகும்.
பாரதத்தின் புதிய கொள்கை
பாரதியார் புதிய பாரத சமுதாயம் படைக்க புதிய கொள்கை ஒன்றை அழுத்தமாகக் கூறுகிறார். பாரத நாட்டின் ஒவ்வொரு மனிதனும் ஏழ்மையிலும் பசியிலும் வாடக் கூடாது என்பது அவரது உறுதியான முடிவாகும்.
எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"
பாரதம் மட்டுமன்றி, இந்த உலகில் தனி ஒரு மனிதன் உணவில்லை என்று பசித்து வாடினாலும் இந்த உலகம் அழிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாகக் கூறுகிறார். அவர். அவர் காண விரும்பிய புதிய பாரதம் அதுவேயாகும்.
ஆன்மீக பாரதம்
பாரதம் ஆன்மீக உணர்வு மிகுந்த நாடு. இறை நம்பிக்கை மிகுந்த நாடு. தெய்வீகம் நிறைந்த நாடு "எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்" என்பது இறைத் தத்துவம். தெய்வீகத் தன்மையை அனைவரும் கொண்ட நிலையை இந்த உலகிற்கு இந்தியா உணர்த்தும் நிலை வரும். அதுவே தான் காண விரும்பிய புதிய பாரதம் என்கிறார் பாரதியார்.
வேற்றுமையில் ஒற்றுமை
மக்கள் அனைவரும் மன அமைதியுடன் வாழ்ந்து, இறைவனை அடைகின்ற வழியை இந்தியா இந்த உலகிற்கே கற்றுக் கொடுக்கும். ஏனெனில் இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும் மனதளவில் இங்கு வாழும் அனைவரும் ஒன்றே. இதையே பாரதியார்,
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்"
என்று புதிய சமதர்மக் கொள்கையாக அறிவிக்கிறார்.
பாரத நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சுதந்திர மனப்போக்குடன் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் மனநிலை கொண்டவர்களாக, ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக எண்ணி வாழ வேண்டும் என்று சூளுரைக்கிறார்.
முடிவுரை
'பாரத சமுதாயம்' என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் பாரதியார் புதிய பாரதம் குறித்த தனது கனவை அழகுற வெளிப்படுத்துகிறார். அத்தகைய புதிய பாரத நாட்டில் வாழும் மக்களை 'வாழ்க வாழ்க' என்று வாழ்த்துகிறார். தான் காண விரும்பிய பாரத சமுதாயம் என்றென்றும் வெற்றிப் பாதை நோக்கியே செல்லும் என்று உறுதியாக நம்பினார் பாரதியார்.
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய! ஜய! ஜய!"

கருத்துகள்
கருத்துரையிடுக