முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூகப் பிரச்சினைகளை பிரதிபலித்த சிறந்த கவிஞர் – தமிழ் ஒளி நிறுவுக

முன்னுரை


உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த சுதந்திரம் பயன்படவேண்டும் என்ற கொள்கையினை உடையவர் கவிஞர் தமிழ்ஒளி. புதுவையில் பிறந்ததாலும் பொதுவுடைமைச் சிந்தனையோடு கவிதைகளை எழுதியதாலும் பாரதிதாசன் விரும்பியதொரு எழுத்தாளராகத் திகழ்ந்தார். தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். பொது மக்களின் நலனுக்காக நெஞ்சத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருபவனே உண்மையான கவிஞன் என்றும் உண்மை, அன்பு, வாழ்க்கை மற்றும் கலைத்திறனோடு படைப்புகள் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் எழுதினார். எனவே, சமூகப் பிரச்சினைகள் அனைத்தும் இவரது படைப்புகளின் பாடுபொருளாயின. தாய்மொழிக் கல்வியைத் தமிழ்ஒளி ஆதரித்தார். சாதி, மத வேறுபாடுகளைக் களையவும் தமிழ்ப்பண்பாடு மேம்படவும் தளராமல் எழுதி வந்தார். 'அந்தி நிலா பார்க்க வா!' என்ற குழந்தைப் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றன. குறுநாவல், காவியம், சிறுகதைகள், ஓரங்க நாடகம், வரலாற்று நூல் எனப் பன்முகப்படைப்பாளியாகத் திகழ்ந்த தமிழ் ஒளியின் கவிதைகளில் உள்ள சமூகப் பிரச்சனைகள் குறித்து இப்பகுதியில் ஆராயலாம்.

பிரபல கட்டுரைகள்

கவிஞர் தமிழ்ஒளி கால சமுதாயப் பிரச்சினைகள்


1947-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த தமிழ் ஒளி, மே தினத்தைப் பற்றிக் கவிதை எழுதினார். அக்கவிதை, தொழிலாளர்களின் நிலையைப் புரட்சியோடு கூறியது. உழவனின் பொங்கல் கனவு, நெசவாளி விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் துறைமுகத் தொழிலாளி, கடலைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் மீனவர், மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் சலவைத் தொழிலாளி, வீதியில் நின்று கையேந்தும் கழைக்கூத்தாடி, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் என அவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியவையாகும். அரசியலில் சிக்கல்களும் போராட்டங்களும் மிகுந்திருந்த சூழலில் கவிஞர் வாழ்ந்தவர் என்பதால், தம் படைப்பில் அதனைப் பாடுபொருள் ஆக்கினார். ஆட்சி செய்வோரைச் சொற்களால் எதிர்த்தார். சாதிய வெறியினை 'வீராயி' என்ற காவியமாக்கினார். 'நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா' என்று கேள்வி எழுப்பியவர். உரிமையற்றுக் கிடந்த உழவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை. போராட்டம் மிகுந்ததாகவே இருந்தது.

"ஊரை எழுப்பிடவே - துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் - தமிழ்ச்
சாதி விழித்திடவே!"

எனத் தமிழ் மக்கள் முடங்கிக் கிடப்பதைக் கண்டு, வீறு கொண்டு எழுச்சியுற வேண்டுமாறு பாடினார். சாக்கடைச் சமுதாயம் என்ற பெயரில் கதைத் தொகுப்பு எழுதினார். இவற்றையெல்லாம் அறியும்போது. அன்றைய காலத்தில் அதிகமான சமுதாயச் சீர்கேடுகள் இருந்ததை உணரமுடிகிறது.

ஒரு எழுத்தாளன் படைக்கின்ற படைப்புகள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்; எழுத்தாளனுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கக்கூடாது என்ற கொள்கையுடன் தமிழ் ஒளி வாழ்ந்துள்ளார்.

போராட்டம் மிகுந்த எளியவர்கள் வாழ்க்கை நிலை


மக்களின் பிரச்சினைகளைக் கண்டு மனம் வருந்திய கவிஞர் தமிழ்ஒளி, சமுதாயத்தை மாற்றியமைக்க பொதுவுடைமை இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார். பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜீவாவுடன் இணைந்து செயல்பட்டார். ஏழைகளாகவே வாழ்கின்ற உழைக்கும் மக்களின் வாழ்க்கையினைக் கண்டு கொதித்தெழுந்தார். முதலாளிமார்களும், அரசியல்வாதிகளும் எளிய மக்களை ஏமாற்றி, அடிமையாக வைத்திருப்பதில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்தார். சாதி, மதம், மூடப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் மக்கள் முடங்கிக் கிடப்பதை எதிர்த்தார். தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் கவிதை வரிகளால் ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தினார். பாரதி, ரஷ்யாப் புரட்சி செய்ததை ஆதரித்தது போல, இவர் சீனப்புரட்சியை ஆதரித்துப் பாடினார்.

நீதித்துறையின் செயல்பாட்டினை, 'கெட்ட கனவு' என்ற சிறுகதையில் விமர்சித்தவர். நீதிபதியைப் பார்த்து, "ஒரு நாளாவது மனிதனைப் பற்றியும் அவன் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பது பற்றியும் அவன் சூழ்நிலையைப் பற்றியும் நீர் யோசித்தது உண்டா?" என்று கேள்வி கேட்டவர். இக்கேள்வி, இன்றைக்கும் பொருந்தும்.

“கத்தி முனைதனிலே - பயங்
காட்டும் உலகினிலே
சத்திய பேரிகையை - நான்
தட்டி முழக்கிடுவேன்"

எனக் கவி இயற்றி சமூகத்தை எழுச்சியுறச் செய்தார். எளிய குடும்பத்தில் பிறந்த தாழ்ந்த ஜாதிப் பெண்கள், தங்கள் கற்பை பாதுகாக்கப் போராட வேண்டியிருந்தது. நொந்து கிடப்பவர்க்கு வாழ்க்கையில்லாமல், நொள்ளை விடுதலை யாருக்கடா? என்று கூறினார். இயற்கைச் சூழலைப் பாடுவதில்கூட மக்களின் பிரச்சினைகளை நினைவூட்டியவர் கவிஞர் தமிழ்ஒளி, இடியும் மின்னலும் தோன்றியதுகூட மக்கள் தொடுத்திட்ட யுத்தமாகத் தெரிகிறது. இவரது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை.

பிரபல கட்டுரைகள்

கந்தல் உடையின் எண்ணற்ற கண்களான விண்மீன்கள்


ஆகாயத்து விண்மீன்களைப் பார்த்த கவிஞர் தமிழ்ஒளிக்கு, அவற்றின் அழகை ரசிக்கத் தோன்றியதைவிட, மண்ணில் வாழ்கின்ற மக்களின் சிக்கல்களே நினைவிற்கு வருகிறது. வானத்தில் மின்னுகின்ற விண்மீன்கள், ஏழைகள் வாழும் குடிசை வீட்டின் ஓட்டைகளாகத் தோன்றுகின்றன. உழைத்து வாழ்பவர்களின் உடம்பில் உள்ள தழும்புகளாகத் தெரிகின்றன. உழைப்பவர் உடலில் அத்தனை காயங்கள் ஏற்பட்டதன் அடையாளமாகத் தழும்புகள் உள்ளன.

தமிழ்நாட்டு மக்களின் கண்களெல்லாம் துடித்துக் கிடப்பதாகத் தோன்றுகின்றன. மக்கள் தினமும் சிக்கல்களுடனே வாழ்கின்றனர். பெண்களுக்கென எந்தச் சுதந்திரமும் உரிமைகளும் இல்லை. எனவே, அவர்கள் சோக உணர்ச்சிகளோடு உள்ளனர். அத்தகைய உணர்ச்சியின் சிதறல்களாக விண்மீன்கள் காட்சியளிக்கின்றன.

"இரவெனும் வறுமையின் கந்தல்உடை - தனில்
எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?
அருந்தக்கூ ழின்றியே வாடுபவர் - கண்ணீர்
அருவித் துளிகளோ வான்குன்றிலே "

என மக்களின் வறுமை நிலையை விண்மீன்களாக உருவகப்படுத்துகின்றார். பிச்சையெடுப்பவர்களின் மனதில் எழுகின்ற விம்மல்களான விண்மீன், திடீரென கவிஞருக்கு அற்புதமாகத் தெரிகிறது. நீலக் கண்ணாடியால் ஆன கோட்டையில் மின்னல் நெளிவில் இறைக்கப்பட்ட காட்சியாக விண்மீன்கள் விளங்குகின்றன. உண்மையாக வாழ்கின்ற தொழிலாளர்களின் எண்ணத்தில் உள்ள துன்பங்கள் பொங்கி வெளிப்பட்டு விண்மீன்களானதோ? எனக் கவிதையை முடிக்கிறார்.

கவிதைக்குத் தலைப்பு வைத்திருப்பதில்கூட வேறுபட்ட சிந்தனையுடன் 'மீன்கள்' எனக் குறிப்பிடுகிறார். 'விண்மீன்கள்' எனத் தலைப்பிடாமைக்குக் காரணம், 'நீந்திக்கொண்டேயிருக்கின்ற உழைப்பின் அடையாளமான மீன்களை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணமாக இருக்கலாம்'.

முடிவுரை


எளிய மக்களின் வாழ்க்கையினை உயர்த்துவதற்காக அதிகமாக எழுதுகோலைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர் தமிழ்ஒளி. பொதுமைச் சிந்தனை மிகுந்தவர் கவிஞர் என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது. பாட்டாளி மக்களுக்குப் பாதுகாவலனாக விளங்கியுள்ளார். புலமை மிக்க எழுத்தாளர்: யதார்த்தவியலோடு எழுதியவர் என்பதை அவருடைய படைப்புகள் உறுதிபடுத்துகின்றன. தொழிலாளரின் சிக்கல்களுக்குத் தீர்வு காணத் துணிந்த அவரது கம்பீரத்தைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...