ஆசிரியர் அறிமுகம்
சொ.விருத்தாசலம் என்பவர் புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்டு சிறுகதைகள் பற்பல எழுதினார். அவர் மேற்கொண்ட புனைபெயர் அவருக்கு முற்றிலும் பொருந்தும் என அவரது சிறுகதைகள் விளக்கிவிட்டன. தமிழில் சிறுகதைத் தந்தை என்ற புகழுக்கு உரியவர் அவர். சிறுகதை வளர்த்த இதழாகிய 'மணிக்கொடி' தொடங்கிய காலம் 1933. அக்காலத்திலேயே சிறந்த ஆசிரியராக விளங்கினார். பலவகை வாழ்க்கைச் சித்திரங்களைத் தாம் கண்டவாறோ, உணர்ந்தவாறோ எழுதிய கலைஞர் அவர்.
கதைக்கரு
ஒரு படைப்பாளரின் படைப்பு உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைக்காமல் போகும்பொழுது, அவனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. இவ்வுலகம் எப்பொழுது திருந்தும். திருந்தும் வரை நாம் இருக்கமாட்டோம். நம் படைப்புகள் இருக்கும். அது அவர்களைத் திருத்தும் என்ற நம்பிக்கையை 'கடிதம்' சிறுகதை எடுத்துரைக்கிறது.
பிரபல கட்டுரைகள்
TNPSC Group 4 General English 2024 Official Question Paper (Free Test)
19 Feb 2026
TNUSRB PC 2022 Question Paper | இலவச ஆன்லைன் தேர்வு (Free Quiz)
17 Mar 2025
அகத்தியம் - அகத்தியர் வரலாறு
28 Jun 2025
‘கடிதம்' - கதைச்சுருக்கம்
சிங்காரவேலு ஓர் கதாசிரியர். அவர் தான் எழுதிய கதைகளுக்கு உரிய புகழ் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார். இதனை அவ்வப்பொழுது தன் நண்பன் சுந்தரத்திடம் சொல்லிப் புலம்பவது உண்டு. ஒரு நாள் ஒரு கடிதம் வருகிறது. விசாகப்பட்டி நாகப்பன் எழுதியதாக ஆவலோடு படிக்கிறார். மீண்டும் மீண்டும் படிக்கிறார். பளீரென தனக்கு ஓர் விசயம் புரிகிறது. இது தனது நண்பர்கள் வேலைதான் என்று உணர்ந்து இப்படிப் போலித்தனமானவர்கள் என்னைக்குத்தான் திருந்துவார்கள்? என நொந்து கடிதத்தை எரித்துவிடுகின்றார். அறை முழுவதும் இருள் கவ்விக் கொள்கிறது. இருளுக்குப் பிறகு ஒளிபிறக்கும் என்ற நம்பிக்கை கொள்கிறார். காத்து இருப்போம் என கடிதத்தின் கதையை முடிக்கின்றார்.
கதாபாத்திரங்கள்
தாம் கண்ட வாழ்க்கைக் கோணங்களைக் கண்டவாறே எடுத்துரைத்து, அவைபற்றித் தாம் உணர்ந்தவற்றையும் சேர்த்துச் சொல்லி அருமையான சிறுகதை ஆக்கிவிடுகிறார் புதுமைப்பித்தன்.
முதன்மை கதாப்பாத்திரம்
சிங்காரவேலு
தான் எழுதிய கதை சிறப்படைய வேண்டும். இத்தேச மக்களின் தரித்திரம் தொலைய வேண்டும் என எண்ணும் சிந்தனையாளர். உண்மையும், பொய்யும் கலந்து கிடக்கும் இச்சமூகத்தில், உண்மையை உரைக்கச் சொன்னால் கேளாமல், கேளி பேசும் மக்களை சாடுகின்றார். கதாசிரியரின் உள்ளமோ இயல்பான கலையுள்ளம். அதனை கலங்கப்படுத்திப் பார்க்க நினைப்பவர்களை முட்டாள்கள், ஜந்துக்கள் என்னும் தைரியமில்லாத கோழைத்தனமானவர்கள். இவர்கள் எப்பொழுது திருந்துவார்கள் என பேசுகின்றார். அதுவரை காத்து இருப்போம் என்கிறார்.
துணைமை கதாபாத்திரம்
சுந்தரம்
கதாசிரியர் சிங்காரவேலுவின் உற்ற நண்பர். அடிக்கடி சந்தித்து சகல விசயங்களை அலசிப் பேசுவது இருவரின் வழக்கம். தன் நண்பரின்மீது அக்கறையுள்ளவர். இருவரும் வெற்றிலைப் போட்டுக்கொண்டு பல விபரங்களை பேசக்கூடியவர்கள். இவர்களின் நட்பு ஓர் 'கடிதம்' வந்தப்பிறகு முடிவுக்கு வருகிறது. கூட இருந்தவர்களே குணம் கெட்டவர்களாக இருப்பார்களா என்பதற்கிணங்க நடந்து கொண்ட சுந்தரம் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக