திரைப்பட அறிமுகம்
பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.
கதைச்சுருக்கம்
பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்கிறார்.
கலைஞரின் திரைப்பணி
திரைத்துறையில் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கியவர் கலைஞர் மு. கருணாநிதி. திரைத்துறையில், கலைஞர் தனக்கென இலக்கியம் கலந்த தனிநடையைக் கையாண்டார். பகுத்தறிவு, அரசியல், சமூகமுன்னேற்றம், பெண்ணுரிமை, இலக்கியம் ஆகியன அவரது திரைப்படங்களில் மிளிர்ந்தன. ராஜகுமாரி, பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் முதலானவை கலைஞரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற திரைப்படங்கள் ஆகும். திரைத்துறையில் அவரது எழுத்தில் வெளியான இறுதி திரைப்படம் பொன்னர்சங்கர் (2011) என்பதாகும். 75 திரைப்படங்களில் பணியாற்றிய கலைஞர் தனது வரிகளால் திரைத்துறையில் மட்டுமின்றி சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ராஜாராணி - நாடகங்கள்
ராஜாராணி திரைப்படத்தில் சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் ஆகிய இரண்டு ஓரங்க நாடகங்கள் இடம்பெறுகின்றன. அவற்றுள் சாக்ரடீஸ் நாடகப் பாடப்பகுதியாக அமைந்துள்ளது. சாக்ரடீஸாக சிவாஜிகணேசன் நடித்துள்ளார்.
சாக்ரடீஸ்
கிரேக்க வீதியொன்றில் சாகரடீஸ் "உன்னையே நீ அறிவாய்" என்று அறிவுரை ஆற்றுகிறார். இவர் அரசுக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறார்; கலகம் விளைவிக்கிறார் என்று அனிடெஸ், மெலிடெஸ் இருவரும் சாக்ரடீசைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி சாக்ரடீஸ் விஷம் தின்று சாகவேண்டும் என மரண தண்டனை விதிக்கிறார். சிறையில் இருக்கும் சாக்ரடீஸ் தன் மனைவியை எண்ணிப் பேசுகிறார். கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸின் நிலைக்காக வருந்துகிறார். காவலன் விஷம் நிறைந்த கிண்ணத்துடன் அங்கு வருகிறான். விஷத்தை அருந்தி சாகும்முறை பற்றி காவலன் எடுத்துக் கூறுகிறான். சாக்ரடீஸ் விஷக் கிண்ணத்தை வாங்குகிறார். கிரிட்டோ சிறிது நேரம் கழித்துக்கூட விஷத்தை அருந்தலாம் எனக் கூறுகிறார். அது அற்ப ஆசை என்று சாக்ரடீஸ் கூறி விஷத்தை அருந்துகிறார். அவரது உடலை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என கிரிட்டோ கேட்க சாக்ரடீஸ் விளக்கமளிக்கிறார். இவ்வாறாக சாக்ரடீஸ் நாடகம் ராஜாராணி படத்தில் இடம்பெறுகிறது.
கதாபாத்திரங்கள்
சாக்ரடீஸ், மெலிடஸ், அணிடஸ், நீதிபதி, கிரீடோ, சிறைக்காவலன்.
சாக்ரடீஸ் கதைச்சுருக்கம்
கடவுள், சமூகம், நீதி, நியாயம், ஆத்மா, அரசு என எல்லாவற்றையும் ஆய்வு செய்தவர் சாக்ரடீஸ். அவரைச் சுற்றி எப்போதும் இளைஞர்கள் கூட்டம் இருக்குமாம். பிளேட்டோ, அவ்வாறே சீடரானரார். மீனோ, கிரீடோ, சாக்ரடீஸின் உடன் இருந்தவர்கள். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே, சாக்ரடீஸ்க்கு எதிராகச் சிலர் விமர்சிக்கின்றனர். அநீதி இளைஞர்களைக் கெடுத்தல் போன்ற காரணங்களுக்காக சாக்ரடீஸ் சிறைப்படுத்தப்படுகிறார். பொது இடங்களில் மக்களை அதிகமாகச் சந்தித்து உரையாடியதற்காக, அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தண்டனையாக விஷம் கொடுக்கப்படுகிறது. முற்காலத்தில் நீதிக்காகப் போராடுபவர்களின் நிலை பரிதாபமாக இருந்ததை சாக்ரடீஸின் வாழ்க்கையும் நாடகமும் பிரதிபலித்து நிற்கின்றன. கி.மு.399 பிப்ரவரி 15 அன்று கிரேக்க தத்துவவாதி சாக்ரடீஸ், ஏதென்ஸ் அதிகாரிகளால் மரண தண்டனைக்கு ஆளாகிறார். இதுவே, சாக்ரடீஸ் நாடகமாக அமைந்துள்ளது.
மெலிடஸ் - ஒரு கலைஞன்
கிரிட்டோ - சாக்ரடீஸின் நலன் விரும்பி
இவர்களைக் கொண்டே நாடகம் அடுத்த நிலைக்கு நகர்ந்து செல்கிறது. சாக்ரடீஸின் வாழ்க்கையில் நடந்த இந்நிகழ்வுகளை 'டயலாக்' என்ற நூலில் பிளேட்டோ பதிவு செய்துள்ளார். அதனையே, ராஜாராணி திரைப்படத்தில் நாடகக் காட்சியாகக் கலைஞர் கருணாநிதி வசனப்படுத்தியுள்ளார்.
கலைஞர் மு.கருணாநிதியின் சிறந்த இலக்கிய பங்களிப்புகளில் ஒன்று அவரது "முதல் நூற்பா" ஆகும். அவரது எழுத்தாற்றல், சமூகப் புரிதல் ஆகியவை குறித்து மேலும் அறிய, இங்கே கிளிக் செய்து 'முதல் நூற்பா' பற்றிய விரிவான கட்டுரையைப் படிக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக