முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு

தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் காலம் கி.மு. 5000ஆண்டுக்கு முற்பட்டது என்கிறது இறையனார் களவியலுரை. காப்பியன் என்பது இவரின் குடிவழிப் பெயராகும். தொல் என்பது அடைமொழியாகும். "திரண தூமாக்கினியர்” என்பது இவர்பெயர் என நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் பாண்டியன் தலைநகரான கபாடபுரத்தில் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் தன்நூலை அறங்கேற்றினார். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் பாயிரத்தில் பனம்பாரனார் இவரைப் பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் இயற்றிய பனம்பாரனாரும் தொல்காப்பியரும் அகத்தியரின் ஒரு சாலை மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியரின் சமயம் இதுவரை அறியப்படவில்லை. தொல்காப்பியம் மூலம் முழுவதும் கி.பி.1847ஆம் ஆண்டு சாமுவேல் பிள்ளையால் முதன்முதலில் அச்சிடப்பெற்றது. இதுவரை 150 பதிப்புகளைக் கண்டுள்ளது தொல்காப்பியம். தொல்காப்பியச் சுவடுகள் இதுவரை 133 கிடைத்துள்ளது என்கிறார்கள்.

தொல்காப்பியர் - குறிப்புகள்

தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் பன்னிரு மாணாக்கர்களில் ஒருவர் என்கிறார்கள். சேர நாடான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு எனும் ஊரில் தொல்காப்பியர் பிறந்ததாகக் கூறுகிறார்கள். அவ்வூரில் நிறுவப்பெற்றுள்ள தொல்காப்பியர் சிலைக்குக் கன்னியாகுமரி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்படுகிறது. திரவிதாங்கோடு தொல்காப்பியர் ஊர் என்று வையாபுரி பிள்ளை கூறியுள்ளார்.

தொல்காப்பியர் எழுத்தாணியுடன் – தமிழ் இலக்கிய அறிஞர், தொல்காப்பிய நூலின் ஆசிரியர் | Tholkappiyar with Ezhuthaani
தொல்காப்பியர்

தொல் காப்பு இயம் எனும் மூன்று சொற்களால் ஆனது தொல்காப்பியம். இதற்குப் பழமையான மொழிப் பாதுகாப்பு நூல் எனப்பொருள் கூறி, நூலை அடிப்படையாக வைத்து தொல்காப்பியருக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தாகூர் சட்ட விரிவுரையாளர் க.சுப்பிரமணியப் பிள்ளை கூறியுள்ளார். காப்பியக் குடியில் பிறந்ததால் காப்பியர் எனும் சிறப்புக் கருதி தொல்காப்பியர் எனும் பெயர் வந்திருக்கலாம் என்று வித்துவான் வெள்ளை வாரணார் கூறியுள்ளார். காப்பியம் எனும் இலக்கண நூலைச்செய்ததால் காப்பியர் எனும் பெயர் வந்தது என்று பேராசிரியர் ந.இலக்குவனார் இயம்பியுள்ளார்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, உவமை எனும் ஐந்து தமிழ் இலக்கணங்களுக்கும் காப்பியர் ஐந்திரம் எனும் இலக்கண நூல் இயற்றியமையால் காப்பியன் எனும் சிறப்புப் பெயர் பெற்றார் என்று கோ.கோவிந்தசாமி நாயுடு கூறுகிறார். அதற்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது சான்று என்கிறார்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் காலம் பற்றி இதுவரை உறுதியாக யாராலும் கூறமுடியவில்லை. ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களிடையே மாறுபட்டக் கருத்துகள் நிலவுகின்றன.

  1. வித்துவான் ந.வெள்ளைவாரணார் - கி.மு 5320
  2. புலவர் குழந்தையார் - கி.மு 2000
  3. க.சுப்பிரமணியப்பிள்ளை - கி.மு 1200
  4. பேராசிரியர் ந.இலக்குவனார் - கி.மு 700
  5. மா.இராஜமாணிக்கனார் - கி.மு 400
  6. எஸ்.வையாபுரிப்பிள்ளை - கி.மு 400
  7. தெ.பொ.மீனாட்சிசுந்தரம் - கி.மு 200
  8. இரா. இராகவையங்கார் - கி.மு 200

ஆகியோர் சொல்வதையும் மு.வரதராசனார் சொல்வதையும் ஆராய்ந்து பார்த்தால் மு.வரதராசனாரின் கருத்து பொருத்தமாகத் தெரிகிறது. கிறித்துவுக்கு முன் தொல்காப்பியம் தோன்றியது என்பதில் ஐயமில்லை.

பிரபல கட்டுரைகள்

தொல்காப்பியம் அமைப்பு

இதுவரை தமிழ்மொழிக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களுள் முழுமையாகவும் காலத்தால் முந்தியதும் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாகத் தொல்காப்பியம் உள்ளது. இந்நூலை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளனர். இளம்பூரணர் உரைப்படி தொல்காப்பியத்தில் மொத்தம் 1595 நூற்பாக்கள் உள்ளன. நூற்பா எண்ணிக்கையில் உரையாசிரியர்களிடையே வேறுபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் ஒழுங்கை விளக்கி நிற்பவையாகும். பொருளதிகாரம் தமிழ்மொழிப் பேசும் தமிழர்களின் உயர்ந்த எண்ணத்தையும், ஒழுக்கத்தையும் சிறப்பித்துக் காட்டுகிறது. உலகிலுள்ள மொழிகளுக்கு எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்தான் உண்டு. ஆனால் உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்புகளில் ஒன்று தமிழ்மொழிக்கு இலக்கண ரீதியாகப் பொருளதிகாரம் இருப்பதாகும்.

எழுத்ததிகாரம்

எழுத்துகளின் இலக்கணத்தை முறைப்படி எடுத்துரைக்கும் பகுதி எழுத்ததிகாரமாகும். தொல்காப்பியர் எழுத்திலக்கணத்தை நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்து 483 நூற்பாக்களில் எழுத்துகளின் செயல்களை விளக்கியுள்ளார். தமிழ் எழுத்துகள் முதல், சார்பு என இருவகையுடன் முப்பது என்கிறது தொல்காப்பியம்.

எழுத்தெனப் படுப
அகரமுதல்
னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே

என்கிறது தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு முதல் நூற்பா. குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துகள் என்கிறார். மொழிக்கு இன்றியமையாத ஒருமை, பன்மை, வல்லினம், மெல்லினம், இடையினம், எழுத்துகளின் வடிவம், வகை, நிற்கும் இடங்கள், பிறப்பு போன்றவற்றைச் சிறப்பாக விளக்குகிறார். சொற்கள் இணையும் போதும், திரியும் போதும் பொருள் மாறுபடும் என்பதையெல்லாம் ஏனையப் பகுதிகளில் குறிப்பிடுகிறார்.

சொல்லதிகாரம்

சொல்லதிகாரம் என்பது தமிழ்ச் சொற்களின் சிறப்பு, திணை, பால், உயிர்பகுப்பு, நாகரிகச் சொற்கள், சொல்லுக்குரிய விதிகள் போன்றவற்றைக் குறிப்பிடுவதாகும். கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்து 456 நூற்பாக்களில் சொல்லதிகாரச் செய்திகளைத் தொல்காப்பியர் விவரிக்கிறார். தமிழ்ச்சொற்கள் அனைத்தும் உயர்திணை, அஃறிணை ஆகிய இரு பிரிவுகளுக்குள் அடங்கும் என்கிறார்.

“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே”

என்கிறது தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் முதல் நூற்பா. உயர்திணைச் சொற்களை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்றும் அஃறிணைச் சொற்களை ஒன்றன்பால், பலவின்பால் என்றும் பிரித்து தெளிவுபடுத்தியுள்ளார். வேற்றுமை வகைகளும் சொல்லின் முதல், ஈறு, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனும் ஆறு உறுப்புகளும் பெயர், வினை எச்சங்களும் இடை உரிச்சொற்களும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

சொல்லின் இலக்கணத்தைக் கூறுவதுடன் இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல் ஆகிய நான்கும் ஆறுவகை தொகைகளும் பத்து வகை எச்சங்களும் சொல் மரபுகளும், அவை ஆளும் முறைகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் திணை, பால் பாகுபாடுகள் அனைத்தும் பகுத்தறிவுக்கு உட்பட்டதாகவே கருதுகிறார்கள்.

பொருளதிகாரம்

பிறமொழிகளுக்கு இல்லாத தனிசிறப்பு தமிழ்மொழிக்குப் பொருளதிகாரம் இருப்பதாகும். இலக்கியத்தில் அமையும் சொற்களுக்குப் பொருள் கூறும் இலக்கணப் பகுதியே பொருளதிகாரம் என்கிறார்கள். மனித வாழ்க்கை கூறுகளாகிய அகம், புறம், களவு, கற்பு, மரபு போன்ற முதன்மையான தகவல்களைப் பொருளதிகார நூற்பாக்கள் தெரிவிக்கின்றன.

அகத்திணையியல், கற்பியல், பொருளியல், புறத்திணையியல், களவியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்து 656 நூற்பாக்களில் பொருளதிகாரத் தகவல்களைத் தொல்காப்பியர் விவரிக்கிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் நிலப்பகுப்புகளையும், முதல், கரு, உரிப்பொருள்கள் பற்றிய சிறப்புகளையும் தொடல்காப்பியர் கூறியுள்ளார். அகப்பொருள் ஏழு வகைப்படும் எனக் கூறியுள்ளார். 

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”

என்கிறது தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் முதல் நூற்பா. ஏழுதிணை ஒழுக்கங்களில் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ஆகும். கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் என்கிறது தொல்காப்பியம்.

அக வாழ்க்கை களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என இரு வகைப்படும். களவு வாழ்க்கை என்பது தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ஒருவருக்கொருவர் அன்பை வளர்த்துக் கொள்வது. கற்பு வாழ்க்கை என்பது திருமணத்திற்குப் பின்பு கூடியும் ஊடியும் வாழும் வாழ்க்கையாகும். இதைத்தான் தொல்காப்பியர் அகத்திணையியலில் விளக்கியுள்ளார். இப்படி ஒவ்வொரு இயலும் மனித வாழ்க்கையொடு, உயிரோடு, இயற்கையோடு தொடர்புடைய செயல்களுக்குப் பொருள் ஆய்ந்து விளக்குகின்றன.

தொகுப்புரை

தொல்காப்பியத்தை மூன்று அதிகாரங்களாகப் பிரித்து அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளார் தொல்காப்பியர். மொத்தமுள்ள 27 இயல்களில் இயலுக்கு எத்தனை நூற்பாக்கள் தொல்காப்பியர் இயற்றினார் என்ற உண்மையை அறியமுடியவில்லை. காரணம் உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்களின் நூற்பா எண்ணிக்கையில் வேறுபடுகின்றனர். சில உரையாசிரியர்கள் சில நூற்பாக்களை இரண்டாகவும் மூன்றாகவும் பிரித்துக் கூறுகிறார்கள். அதனால் அவரவர் கற்ற தொல்காப்பிய உரைநூலில் குறிப்பிட்ட நூற்பா எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா

Current Affairs (Click here)

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...