முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

“Bharatha Samudhayam Vaazhgave” – a powerful Tamil poem line by Mahakavi Bharathiyar celebrating patriotism, equality, and social justice.
Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar 


ஆசிரியர் அறிமுகம்


எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர்.


கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன.

கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம்.

கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி
பாரதியார்

பாடல் குறிப்பு

சமுதாயம் என்பதற்கு மக்கள் தொகுதி என்பது பொருள். தனிமனிதன், குடும்பம், உறவுகள், ஊர், நகரம், நாடு என்ற அமைப்பே சமுதாயம் ஆகும்.

நம் பாரத சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிப்பிரிவுகள் சமயச் சண்டைகள், பெண் அடிமை, பெண் விடுதலை, கல்வி, கலைகள், ஒற்றுமைப் பண்பு, மனித நேயம் என அனைத்தும் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் பொதுவுடைமை காண்பதையே பாரதியார் தன் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். பொதுவுடைமைச் சமுதாயமே அவர் காண விரும்பிய சமுதாயம்.

இறைவன் படைப்பில் அனைத்து இயற்கை வளங்களும் விளைச்சலும் அனைவருக்கும் பொதுவானவை! ஆனால் சிலரே 'இது எங்கள் உடைமை' என்று கூறி, உழைக்கும் மக்களைப் பசியிலும் பஞ்சத்திலும் தவிக்கவிட்டுத் தாம் மட்டும் உண்டு மகிழ்கின்றனர். இந்நிலை கண்டு பாரதியார் கொதித்தெழுகிறார். அக்கொதிப்பில் எழுந்த கவிதைதான் 'பாரத சமுதாயம்' என்னும் கவிதை. 

பாடல்

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய ஜய ஜய ஜய 
 பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை;
ஒப்பி லாத சமுதாயம் உலகத்துக் கொருபுதுமை - வாழ்க!

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு-
கனியுங் கிழங்குந் தான்யங்களும் கணக்கின்றித்தரு நாடு

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ?
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில் ஜகத்தினை அழித் திடுவோம்

எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன் "
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்!


பிரபல கட்டுரைகள்

பாடல் பொருள் விளக்கம்

பாரத சமுதாயம் வாழ்க! அது வளமுடனும் வெற்றியுடனும் வாழ்க! முப்பது கோடி மக்களின் சங்கமமே இந்த பாரத நாடு. முப்பது கோடி மக்களும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை இல்லாத பொதுவுடைமைச் சிந்தனையுடன் வாழும் நாடு நம் பாரத நாடு. இது ஈடு இணையற்ற, ஒப்பில்லாத சமுதாயம்! நிகரில்லாத நம் பாரத நாடு இந்த உலகத்துக்கே ஒரு புதுமை! அத்தகைய சிறப்பு பெற்ற நம் பாரத நாடு வாழ்க!

நம் தேசத்தில் ஒருவன் உணவையோ, உழைப்பையோ, பொருளையோ மற்றவன் அபகரிக்கும் வழக்கம் இனி எந்நாளும் இல்லை!

ஒருவன் மனமும் உடலும் வருந்த, மற்றவன் அதைப் பார்த்து மகிழந்திருக்கும் அவல நிலையும் இனி நம் நாட்டில் எந்நாளும் இல்லை! அறிவற்ற, மனித நேயமற்ற அந்த வாழ்க்கை நம் பாரத தேசத்தில் இனி உண்டோ? நிச்சயம் இல்லை!

நம் பாரத நாடு வளமான நாடு. இனிய சோலைகள் சூழ்ந்த நாடு நம் நாடு. எண்ணற்ற நெடிய வயல்கள் நிறைந்த நாடு நம் பாரத நாடு. பழ வகைகளும் கிழங்குகளும் நவதானியங்களும் என உணவு வளத்தைக் கணக்கின்றித் தரும் நாடும் நம் பாரத நாடே ஆகும். அதிலும் ஒருநாளும் குறைவின்றி நித்தமும் ஏராளமான வளங்களைத் தரும் நாடு நம் நாடேயாகும். அத்தகைய சிறப்பு மிக்க நம் பாரத நாடு வாழ்க!

இனி புதியதாய் ஒரு விதி செய்வோம்! அந்த விதியை நாம் அனைவரும் எந்த நாளும் காப்போம். தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் இந்த உலகத்தை அழிப்போம்! எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பதே நமது புதிய கொள்கையாக. புதிய விதியாக இருக்க வேண்டும். அத்தகைய புதிய விதியைப் பின்பற்றும் நமது பாரத நாடு வாழ்வதாக!

'எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்' என்றான் கண்ணன். உலகில் வாழும் எல்லா உயிர்களும் இறைவன் பண்பை உடையனவேயாகும். அத்தகைய அமரத்துவமான தெய்வீக நிலையை உலகம் உணரும்படியான முறையை நம் இந்திய தேசம் உலகிற்கு அளிக்கும். இது உண்மை ! நம் பாரதமே இந்த உலகிற்குத் தெய்வீகப் பண்பைக் கற்றுக் கொடுக்கும். பாரத தேசம் வாழ்க!

நாம் எல்லோரும் ஒரே குலம்; ஒரே இனம்; எல்லோரும் இந்தியரே! அனைவரும் இங்கு சமம்; நாம் ஒருவருக்கொருவர் சரி சமானம்; எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே! ஆம்! நாம் எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே! வாழ்க நம் பாரதம்! பாரத சமுதாயம் வாழ்கவே !

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...