முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்ரியு கவிதை란 என்ன? சிறப்பம்சங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள்

ஜப்பான் நாட்டில் கி.பி.18ஆம் நூற்றாண்டில் ஐக்கூக் கவிதையில் இருந்து காரை சென்ரியு என்பவர் முதன் முதலில் சென்ரியு கவிதையை இயற்றினார். ஜப்பான் நாட்டின் மரக்கடைகளிலும் தேநீர் கடைகளிலும் பொதுமக்கள் மானுடம் பற்றி பேசிய நகைச்சுவை செய்திகளே சென்ரியு கவிதை உருவாக அடிப்படைக் காரணமாகக் கூறப்படுகிறது. சென்ரியு கவிதை சுருக்கமாகச் சொன்னால் கவிதைகளில் தத்துவம் அதிகம் இருந்தால் அது ஐக்கூக் கவிதை, தத்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது சென்ரியு கவிதை என்கிறார்கள். ஜப்பானில் முதல் உலகப்போர் முடிவுறும் நேரத்தில் இக்கவிதை தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.


சென்ரியு கவிதை - விளக்கம்

ஜப்பான் நாட்டின் எடோ நகரத்தில் கி.பி.1718 ஆம் ஆண்டு காரை ஹச்சிமேன் எனும் இயற்பெயர் கொண்ட சென்ரியு பிறந்தார். இவர் ஜப்பான் நாட்டில் இயற்றப்பட்ட ஐக்கூக் கவிதைகளில் உள்ள மானுடம் பற்றிய நகைச்சுவை தத்துவக் கருத்துகளைத் தொகுத்து சென்ரியு கவிதை எனும் தொகுப்பைக் கி.பி. 1757 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் தொகுத்து வெளியிட்ட நூலுக்கு இவர் பெயரே அமைந்ததால் இவ்வாறான கவிதைகளைச் சென்ரியு கவிதை என அழைக்கப்பட்டு வருகிறது.


சென்ரியு கவிதை - இலக்கணம்

ஐக்கூக் கவிதைக்குரிய அதே இலக்கணம்தான் சென்ரியு கவிதைக்கும். மூன்று வரிகளில் அமைய வேண்டும். ஐந்து ஏழு ஐந்து எனும் அளவில் அசைகள் இருக்க வேண்டும். சென்ரியு கவிதை என்பது ஆழமற்றது, வேடிக்கையானது, விடுகதை போன்றது, நகைச்சுவையானது, பொன்மொழிகள் போன்ற கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்றது. மேலும் சமூகம், அரசியல், பொருளாதாரம், மெய்யியல் போன்றவற்றில் அக்கறை காட்ட வேண்டும் எனக் கூறப்படுகிறது.


தமிழில் சென்ரியு கவிதை

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடராஜன் வள்ளியம்மை தம்பதிக்கு மகனாக 28.09.1940 இல் ஜெகதீசன் எனும் இயற்பெயர் - கொண்ட ஈரோடு தமிழன்பன் பிறந்தார். ஜப்பானில் கி.பி.1757 ஆம் ஆண்டு ஐக்கூக் கவிதையில் இருந்து தோன்றிய சென்ரியு கவிதையை இவர் கி.பி.2001 ஆம் ஆண்டில் ஒரு வண்டி சென்ரியு எனும் சென்ரியு கவிதைத் தொகுப்பைத் தமிழ் நாட்டில் முதன் முதலாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


"தொகுதிதான்
முடிவாகவில்லை
தோல்வி முடிவாகிவிட்டது"

"சட்ட ஒழுங்கை
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்"

இவை போன்ற எண்ணற்ற சென்ரியு கவிதைகளை ஈரோடு தமிழன்பன் இயற்றியுள்ளார். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூக்கவிதை, சென்ரியு கவிதை,விமரைக் கவிதை, விமர்புன்கவிதை, ஐக்கூப் புன் கவிதை, விமர்சென்ரியு கவிதை ஆகிய அனைத்து வகை கவிதைகளையும் தமிழ்நாட்டில் இயற்றிய போற்றுதலுக்குரிய ஒரே கவிஞர் ஈரோடு தமிழன்பண் மட்டுமே ஆவார்.


இவரைத் தொடர்ந்து பாரதி வசந்தனின் யாதெனில், புதுவை யுகபாரதியின் அரசமரம், வே.மணிகண்டனின் மாமதயானை, பிரியாபுளோரியின் குறுமணல், கவிஞர் இரமேஷின் ஓராயிரம் சென்ரியு போன்ற கவிதை நூல்கள் வெளியாகி சென்ரியு கவிதைக்கு வலு சேர்த்து வருகின்றன. ஜப்பானில் ஐக்கூக் கவிதைக்கும் சென்ரியு கவிதைக்கும் உள்ள வேறுபாடு குறித்து மேரிகேசல் என்பவர் கி.பி.1980 ஆம் ஆண்டு நூல் இயற்றியுள்ளார். இதனால் தற்போது பலரும் வேறுபாடுகளை உணர்ந்து அங்குக் கவிதை இயற்றுவதாகக் கூறுகிறார்கள்.


தொகுப்புரை

ஜப்பான் நாட்டில் இருந்து வந்த ஐக்கூ, சென்ரியு கவிதைகள் அதற்குரிய இலக்கணத்துடன் அமையும் போது கவிதைக்குரிய தகுதியைப் பெறுகிறது. வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் உலகளாவிய கருத்துகளை எடுத்தாளும் ஆற்றல் பெற்றவை. புதுக்கவிதைக்கும் ஐக்கூ, சென்ரியு கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து கவிதை எழுத வேண்டும். புதுக்கவிதை எழுதுவதை விட ஐக்கூ, சென்ரியு கவிதைகள் எழுதுவது கடினம், மரபுக் கவிதையைப் புரிந்து கொள்வதைவிட ஐக்கூ, சென்ரியு கவிதைகளைப் புரிந்து கொள்வது கடினம். எனவே ஐக்கூ, சென்ரியு கவிதைகளை அதற்குரிய இலக்கணத்துடன் இயற்றப்பட்டால் தமிழ் இலக்கிய உலகில் அவை நிலைப்பதற்கு வாய்ப்புண்டு.

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...