முகப்பு › 1st Year - Tamil › தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் காலம் கி.மு. 5000ஆண்டுக்கு முற்பட்டது என்கிறது இறையனார் களவியலுரை. காப்பியன் என்பது இவரின் குடிவழிப் பெயராகும். தொல் என்பது அடைமொழியாகும். "திரண தூமாக்கினியர்” என்பது இவர்பெயர் என நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் பாண்டியன் தலைநகரான கபாடபுரத்தில் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் தன்நூலை அறங்கேற்றினார். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் பாயிரத்தில் பனம்பாரனார் இவரைப் பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் இயற்றிய பனம்பாரனாரும் தொல்காப்பியரும் அகத்தியரின் ஒரு சாலை மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியரின் சமயம் இதுவரை அறியப்படவில்லை. தொல்காப்பியம் மூலம் முழுவதும் கி.பி.1847ஆம் ஆண்டு சாமுவேல் பிள்ளையால் முதன்முதலில் அச்சிடப்பெற்றது. இதுவரை 150 பதிப்புகளைக் கண்டுள்ளது தொல்காப்பியம். தொல்காப்பியச் சுவடுகள் இதுவரை 133 கிடைத்துள்ளது என்கிறார்கள். தொல்காப்பியர் - குறிப்புகள் தொல்கா...
Ace your TNPSC, RRB, and SSC exams with Ezhuthumai! Download free study materials, comprehensive MCQs, and high-quality PDF notes. We are your all-in-one platform for competitive exam prep, plus school and college guides.